மனிதாபிமான புனர்வாழ்வு உதவிச் செயற்பாடுகளுக்கான வலையமைப்பு (நாறோ)
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தேசிய மட்டத்தில் பதிவு செய்து மேற்குறித்த பயனாளிகளுக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் அனுமதியுடன், ஓர் வலைப்பின்னல் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. நன்கொடையாளர்கள், பொதுநலன் விரும்பிகளின்
நன்கொடைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை முகாமை செய்வதற்கு 100 அங்கத்தவர்களை கொண்ட பொதுச்சபை அங்கத்தவர்களில் வாக்கெடுப்பின் மூலம் இருந்து தெரிவு செய்யப்படும் 07பேர் கொண்ட நிறைவேற்றுச் செயலணியும், வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைக்கேற்ப பணியாளர்களும் உள்ளனர்.
நிறுவனத்திற்கே உரித்தான யாப்பு மற்றும் மனிதவளக்கொள்கைள், நிதிக்கொள்கைகள், ஆகியவற்றில்
கூறப்பட்டவைகள் இங்கு நடைமுறையில் காணப்படும்.
நிதியாண்டுக்கு அமைவாக பட்டய கணக்காய்வாளர்களினால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நன்கொடையாளர்கள் அரச அதிகாரிகளுக்கு கணக்காய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
மாதாந்த செயற்பாட்டு அறிக்கைகள், நிதியறிக்கைகள், செயற்றிட்ட புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட
நன்கொடையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு ஆண்டு ரிதியான அறிக்கைகள் தேசிய செயலகத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கப்படும்.