வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவனம் இந் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 200 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். அநேகமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். இவர்களுக்கென நிர்வாகம், தொழிற்பயிற்சி, கூட்டங்களினை நடாத்துதல் ஆகியவற்றிற்கென ஒரு கட்டடம் இல்லை. இதற்கென ரூபா 300 மில்லியன் பெறுமதியில் ஓர் திட்டம் தயாரிக்கப்பட்டு, யாழ் மாவட்ட செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது இன்றுவரையில நிறைவேறவில்லை. இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கப்படுகின்றது. நிதியினை அனுப்ப விரும்புவோர் நிறுவனத்தின் பெயருக்கே அனுப்ப முடியும்.